அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா? எஸ்வி சேகர் நக்கல்!
சென்னை: நான் பேசியது புரியாதவர்கள் ஹேராம் பாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பதில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். இதனால் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து 2 நாட்கள் பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருந்த கமல் நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் பிரச்சாரம் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல் ஹாசன் நேற்று மதுரை தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தின் போது தான் பேசியது சரித்திர உண்மை என்று அவர் உறுதிபட கூறினார்.
கமல்ஹாசன் மீது கொந்தளித்து தெருவுக்கு வந்து கொடும்பாவி கொளுத்திய.. வெறும் 4 பேர்!
ஒற்றுமை நம் குணாதிசயமாக வேண்டும். இதுதான் எனது ஆசை. எந்த ஊரிலும், யாரை பற்றியும் சந்தோஷமாக பேசுவேன், விமர்சிப்பேன். இது என் மக்கள். அந்த உரிமையுடன் சொல்கிறேன். புரியாதவர்கள் 'ஹேராம்' படத்தை பாருங்கள் என்றார் கமல்.
அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா. நடக்காது. எப்ப ரிலீஸ் ஆனாலும் ஓடாது. https://t.co/ZuzRw9Ospr
— “CHOWKIDAR”🇮🇳S.VE.SHEKHER (@SVESHEKHER) May 15, 2019
இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு நடிகரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான எஸ்வி சேகர் பதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, 'அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா. நடக்காது. எப்ப ரிலீஸ் ஆனாலும் ஓடாது'. இவ்வாறு எஸ்வி சேகர் கமலின் பேச்சுக்கு டிவிட்டர் வாயிலாக பதில் கொடுத்துள்ளார்.