யோகா செய்யுங்க பதற்றம் குறைஞ்சிடும்.. கமலை கிண்டலடித்த எஸ்வி சேகர்!
சென்னை: தன்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனை பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் கிண்டலடித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்த போது இந்துக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை, வேண்டுமானால் தன்னை கைது செய்துகொள்ளட்டும் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்றார்.
அவரது இந்த பேச்சும் அரசியல் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்காக கமலை தீவிரவாதி என்றார் எச் ராஜா. இந்நிலையில் கமலின் பேச்சுக்கு நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் பதிலளித்துள்ளார்.
என்னைக்கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். - யோகா கத்துகங்க பதட்டம் குறையும். விஸ்வரூப பரிகாரமே உங்க பதற்றத்துக்கு காரணம்.
— “CHOWKIDAR”🇮🇳S.VE.SHEKHER (@SVESHEKHER) May 18, 2019
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். - யோகா கத்துக்குங்க பதட்டம் குறையும். விஸ்வரூப பரிகாரமே உங்க பதற்றத்துக்கு காரணம். என கமல் கூறிய பதற்றத்தை கமலின் பதற்றம் போல் கிண்டலடித்து டிவிட்டியுள்ளார்.