ஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்!
சென்னை: தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்துள்ள நிலையில் தமிழக மக்கள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதாக நக்கலடித்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எஸ்வி சேகர்.
நாடு முழுவதும் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது.
பாஜக தனித்தே 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்து அக்கட்சியை விரட்டியடித்தது பாஜக.
எடப்பாடி தூக்கியெறியப்பட்டு ஓபிஎஸ் முதல்வராவார்.. பாக்க தானே போறீங்க.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி
பின்னடைவு
ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் சோபிக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்த ஆளும் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.
தாமரை மலராது
இந்நிலையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலாராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
இதான் தமிழ் மண்ணா?
இந்நிலையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
மண் அல்ல மணல்
ஒருவர் தானே தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக்கொள்வது போன்ற அந்த போட்டோவை போட்டு பாஜக எதிர்ப்பாளர்களை வெறுப்பேற்றியுள்ளார். இருப்பினும் அது மண் அல்ல மணல், அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் என அவரை விளாசுகின்றனர் நெட்டிசன்கள்.
|
இதான் கான்டா..
ஓ....இதான் கான்டா.... என கேட்டு எஸ்வி சேகரையே நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.