சிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்
சென்னை: சிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுகதான் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார். அதில்,
எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
என்று வைரமுத்து கூறியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பதிவிட்டிருந்தனர். @dvenkat71 என்ற ட்வீட்டிஸ்ட், திமுகவினர் டெல்லி வன்முறையில் இஸ்லாமியர் மட்டுமே தாக்கப்பட்டார்கள் என்பது போலப் பரப்புகிறார்கள். இந்துக்கள், இஸ்லாமியர் ,காவல்துறையினர் என்று அனைவர் மீதும் நடந்துள்ளது. வன்முறையை வைத்து இஸ்லாமியரை மேலும் தூண்டி அரசியல் லாபம் தேடுகிறது திமுக. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.என கூறியிருந்தார்.
@saravananpmk4 என்ற பதிவர், மத்திய அரசு பலமுறை தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது, காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வது தான் மிகவும் வேதனை! மக்கள் முன்பைவிட மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் இந்த விழிப்புணர்வு வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பதிவிட்டிருந்தார். அதே நேரத்தில் வைரமுத்துவின் கருத்தை ஆதரித்தும் சிலர் பதிவிட்டிருந்தனர்.
@Kaaraimaindhen என்ற ட்வீட்டிஸ்ட்,
திலீபனின் கொலையோடு
மறித்துப் போனது அகிம்சை
அதை கொன்று தொலைத்தது
காந்திய பேசும் இந்தியம்
வாழ்வுரிமை நியாயம் கேட்டு
உண்ணா நோன்பு இருந்தவனை
சாக பார்த்தது
கொலை என்றால்
மிகை என்பாயோ நீ!
திலீபன் முதல்
இன்று வரை
இத்தனை சாட்சிகள்
நீளும் போது
என்று கொதித்து பதிவிட்டிருக்கிறார்.
மதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவுக்கு இன்று அளித்த பதில்:
ஆதரித்து வாக்களித்தவருக்கு நன்மை பல செய்யாவிடினும் நெஞ்சில் வன்மத்துடன் சிறுபான்மைக்கு அச்ச விதை விதைத்து அதை ஆலமரமாக மாற்றிய உங்களின் திமுகவிடம் சொல்ல வேண்டியது இந்த அறிவுரை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதையும் சொல்லுங்கள். @ThanthiTV @polimernews @rangats @SVESHEKHER https://t.co/pJFZYbzuC9
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) February 28, 2020
Recommended Video
ஆதரித்து வாக்களித்தவருக்கு நன்மை பல செய்யாவிடினும் நெஞ்சில் வன்மத்துடன் சிறுபான்மைக்கு அச்ச விதை விதைத்து அதை ஆலமரமாக மாற்றிய உங்களின் திமுகவிடம் சொல்ல வேண்டியது இந்த அறிவுரை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதையும் சொல்லுங்கள்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.