யார் மீது எஸ்.வி.சேகருக்கு இப்படி ஒரு கோபம்?
சென்னை: வீட்டுக்கு வந்தால் பல்லிளிக்க வேண்டியது, வெளியே வந்தால் பலூன் விட வேண்டியது என்று, விமர்சனம் செய்துள்ளார், பாஜக பிரமுகரும், நடிகருமான எச்.வி.சேகர்.
மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று சில கட்சியினர் மற்றும் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.வி.சேகர் வெளியிட்ட ட்வீட்டில், "வீட்டுக்கு வந்தா ஹிஹிஹிந்னு கையப்பிடிச்சுகிட்டு பல்லிளிக்க வேண்டியது. வெளில வந்தா பலூன் விட வேண்டியது. கொள்கைக்கும் நடத்தைக்கும் சம்மந்தமில்லாதவர்கள். பாவம் தமிழகம்" என்று கூறியுள்ளார்.
வீட்டுக்கு வந்தா ஹிஹிஹிந்னு கையப்பிடிச்சுகிட்டு பல்லிளிக்க வேண்டியது. வெளில வந்தா பலூன் விட வேண்டியது. கொள்கைக்கும் நடத்தைக்கும் சம்மந்தமில்லாதவர்கள். பாவம் தமிழகம். #TN WELCOMES MODI JI 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 https://t.co/jVrYWkBr2L
— S.VE.SHEKHER (@SVESHEKHER) January 27, 2019
மோடி யார் வீட்டுக்கு சென்றார், யார் அவருக்கு எதிராக இப்போது கருப்பு பலூன் பறக்கவிடுகிறார்கள் என்பதை, மக்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.