சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மாறும் கள நிலவரம், கொரோனா வேகம் குறைகிறதா.. இன்றைய நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 28ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1630 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1643 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆக்டிவ

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1643 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 28ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,60,553 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,643 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,07,796 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 28ம் தேதி மாலை நிலவரப்படி 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,526 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்கு உயர்ந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,231 ஆக உள்ளது. நேற்றைவிட இன்று ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 183 பேரும், சென்னையில் 184 பேரும், செங்கல்பட்டில் 117 பேரும், ஈரோட்டில் 121 பேரும், திருப்பூரில் 86 பேரும், சேலத்தில் 65 பேரும், திருவள்ளூரில் 70 பேரும், தஞ்சாவூரில் 90 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் 2042 பேரும், சென்னையில் 2031 பேரும், ஈரோட்டில் 1206 பேரும், செங்கல்பட்டில் 1111 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

English summary
In Tamil Nadu today, 1,630 people have been affected by the coronavirus. At the same time 1,643 people recovered from the corona impact in a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X