தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 461 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,48,724 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 461 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,32,167 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 449 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 279 பேர் ஆண்கள், 170 பேர் பெண்கள்.
கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 461 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,32,167 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 151 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4, 091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார்.இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 65 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவியர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.