சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி

தமிழகத்தில் மேலும் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,50,577 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,50,577 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 483 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,34,043 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் 11,37,17,932 பேரை பாதித்துள்ளது. 25,22,503 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 8,92,54,613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Tamil Nadu 481 people were affected by the corona today - 5 killed today

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,10,77,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.156,947 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 10,760,379 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 500க்கும் கீழே பதிவாகி வருகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் மேலும் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,50,577 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 483 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,34,043 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,046 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசுகொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசு

இன்று மட்டும் மொத்தம் 5பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் அரசு மருத்துவமனையிலும், 3பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 180 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,35,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,73,76,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,746 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.

English summary
In Tamil Nadu, another 481 people have been diagnosed with corona infection and the number has risen to 8,50,577, according to the state health department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X