தமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று
சென்னை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் அந்த கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். . இவர் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட 12 மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
தேர்தல் நெருங்குவதால் அந்த மாவட்டங்களில் முகாமிட்டு பூத் கமிட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான கட்சி செயல்பாடுகளை ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கே.டி.ராகவனுக்கு கடந்த வாரம் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வலியக்க வந்து வாங்க வாங்கன்னு கூப்பிடும் பாஜக.. குஷ்பு ஏன் அமைதி காக்கிறார்?
இதையடுத்து இன்று காலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குணம் அடைந்துள்ளார்கள்.