தண்ணீர் லாரி வேலை நிறுத்தம்.. சென்னை உட்பட பல இடங்களில் கேன்-வாட்டர் உற்பத்தி நிறுத்தம்!
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் தற்போது கனிமவளம் என்று பிரிவின் கீழ் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுக்க நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த தடைக்கு எதிராக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி இருக்கிறார்கள். முக்கியமாக சென்னை உட்பட பல இடங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக காலையிலே தண்ணீர் லாரிகள் பல இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை, விழுப்புரம் , திருவள்ளூர் உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தபட்டுள்ளது.
தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.