தந்தை பெரியார், பரியேறும் பெருமாள் குறித்து கேள்வி- கட்டுப்பாடுகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது.
Recommended Video
தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மிக முக்கிய தருணம், கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலி... தடுப்பூசி ஒப்புதல் குறித்த ஹர்ஷ் வர்தன்
இன்று குரூப் 1 தேர்வு
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று குரூப்- 1 (தமிழக குடிமைப் பணி தேர்வுகள் குரூப் 1) தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் என 66 காலி பணியிடங்களுக்கு 2.67 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 856 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
கொரோனா சோதனைகள்
இன்று காலை முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பரியேறும் பெருமாள் குறித்து கேள்வி
இன்றைய தேர்வில் 2018-ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும் ஒரு கேள்வி இடம்பெற்றது. தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற தலைப்பில், இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது; இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது; இப்படம் திரு மாரி செல்வராஜால் தயாரிக்கப்பட்டு நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது என்ற ஆப்சன்களுடன் கேள்வி இடம்பெற்றிருந்தது.
தந்தை பெரியார் தொடர்பாக 10 கேள்விகள்
மேலும் தந்தை பெரியார் தொடர்பாக இன்றைய தேர்வில் 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 1929-ம் ஆண்டு முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டுக்கு யார் தலைமை என்பது உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன.