முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்று செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னையில் கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு குறைந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் சிலருக்கும் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
முதல்வரும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருவதால் அவருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்.. தென் மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு?
பரிசோதனைகள்
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அம்மாவின் அரசு, கொரோனா நோய் தொற்றினை கண்டறிய இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
முதல்வருக்கு
இதன் ஒரு பகுதியாக முதல்வருக்கும், முதல்வர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகாம் அலுவலகம்
இந்தப் பரிசோதனையின் முடிவில், முதல்வருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே, தென் மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.