சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்றால் சென்னையில் நேற்று ஒரு நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இறப்புக்கு காரணம் கடுமையான சுவாச பிரச்சனை இன்றே தெரிய வந்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தினமும் சராசரியாக 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னையில் மட்டும் 548 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 17082 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்! ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!

நேற்று முன்தினம் 8 பேர்

நேற்று முன்தினம் 8 பேர்

பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் நேற்று முன்தினம் இறந்தனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரேநாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

112வது நபர் எப்படி

112வது நபர் எப்படி

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 111 பேர் இறந்த நிலையில் 112 நபராக 33வது ஆண் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் 23ம் தேதி இறந்துள்ளார். இவருக்கு 24ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சுவாச பிரச்னையால் இறந்தார். 113வது நபராக இறந்தவர் 72 வயது முதியவர். சென்னையில் கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு நுரையீரல் அடைப்பு மற்றும் கொரோனா நிமோனியா காய்ச்சல் இருந்தது. இதனால் இறந்தார்.

சுகாதாரத்துறை தகவல்

சுகாதாரத்துறை தகவல்

114வது நபராக இறந்தவர் 55 வயது ஆண். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி அதிகாலை நுரையீரல் அடைப்பு மற்றும் நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 115வது நபராக இறந்தவர் 68 வயது முதியவர். இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 25ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நுரையீரல் அடைப்பு மற்றும் கொரோனா நிமோனியாவால் இறந்தார்.

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை

116வது நபராக தமிழகத்தில் இறந்தது 75 வயது முதியவர். சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் 24ம் தேதி இரவு 8.30 மணிக்கு இறந்தார். கடுமையான சுவாச பிரச்சனையால் இறந்தார் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. 117வது நபராக தமிழகத்தில் கொரோனாவால் இறந்தது 86வயது முதியவர். செங்கல்பட்டைச் சேர்ந்த இவர் சுவாச கோளாறால் 24ம்தேதி அதிகாலை 12 மணிக்கு இறந்தார். தமிழகத்தில் 118ம் தேதி இறந்தவர் சென்னையைச் சேர்ந்த 69வயது மூதாட்டி ஆவார். தனியார் மருத்துவமனையில் 23ம் தேதி அதிகாலை சுவாச பிரச்னையால் இறந்தார்

110 பேர் 40ஐ கடந்தவர்கள்

110 பேர் 40ஐ கடந்தவர்கள்

சென்னையில் கொரோனாவால் பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுவரை தமிழகததில் உயிரிழந்த 118 பேர் 110 பேரில் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக 40 முதல் 60 வயது வரை 55 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 55 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 40 வயதுக்கு கீழ் 8 பேர் மட்டுமே இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்த பலருக்கும் பல்வேறு உடல் பாதைகள் இறந்துள்ளனர். அதுவே அவர்களின் இறப்புக்கு முதல் காரணமாக இருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

English summary
yesterday Total number of covid 19 deaths 10 at chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X