தமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 356 பேருக்கு தொற்று!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்புநிலையை நோக்கி சென்றுவிட்டன. 7 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் 17 பேருக்கு கொரோனா உறுதி - சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடு
எவ்வளவு
தமிழகத்தில் டிசம்பர் 4ம் தேதி நிலவரப்படி சுகாதாரத்துறை கொரோனா நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 1391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பலி
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 11762 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 4 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,426 பேர் மீண்டனர். தமிழகத்தில் இதுவரை 7,64,854 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னையில் அதிகம்
சென்னையில் 356 பேருக்கும், கோவையில் 139 பேருக்கும், சேலத்தில் 75 பேருக்கும், திருவள்ளூரில் 66 பேருக்கும், திருப்பூரில் 61 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 85 பேரும்., ஈரோட்டில் 49 பேரும், நீலகிரியில் 43 பேரும், திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 34 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனை எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 70,378 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,23,34,447 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 69,903 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,20,41,933 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 10,938 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.