தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 2435 பேர் பாதிப்பு.. சரசரவென குறைந்த ஆக்டிவ் நோயாளிகள்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,31,942 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 19,201பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த மாதம் 5 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 2500 ஆக குறைந்துவிட்டது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 19 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிக குறைவாக காணப்படுகிறது.
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரான்ஸில் ஒருநாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு
மொத்த எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,31,942 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,707 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,01,527 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 683 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 490 பேரும், சேலத்தில் 172 பேரும், திருவள்ளூரில் 120 பேரும், செங்கல்பட்டில் 136 பேரும்,. ஈரோட்டில் 98 பேரும், திருப்பூரில் 117 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 31 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேர் பலியாகி உள்ளனர். சேலத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் 3 பேரும், ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 2 பேர் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர்-
பரிசோதனை எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 70,398 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,01,69,917 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 69,496 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 98,98,509 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 19,201 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 669 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 201848 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 6384 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 238 பேரும், செங்கல்பட்டில் 136 பேரும், திருவள்ளூரில் 113 பேரும், சேலத்தில் 97 பேரும், திருப்பூரில் 98 பேரும், ஈரோட்டில் 88 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.