தமிழகத்தில் முதல்முறையாக ஆயிரத்திற்கு கீழ் சரிந்த கொரோனா.. செம்ம மாற்றம்
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,16,132 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,16,132 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8747 பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று கொரோனா தொற்றால் 12 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12092 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்இருந்து இன்று மட்டும் 1065 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,95,293 பேர் மீண்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு... கொரோனா சோதனையை கட்டாயமாக்குங்க... உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், கோவையில் 81 பேர், செங்கல்பட்டில் 47 பேர், திருவள்ளூரில் 47 பேர், திருப்பூரில் 38 பேர், ஈரோட்டில் 275 பேர், காஞ்சிபுரத்தில் 25 பேர், சேலத்தில் 34 பேர், திருச்சியில் 22 பேர் மற்றும் மதுரையில் 26 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 35 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.