மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள்.. இதுவரை குணம் அடைந்தவர்கள்!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3994 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதற்கு நிகராக கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு நிகராக 3994 பேர் குணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2700 பேரும், திருவண்ணாமலையில் 204 பேரும், திருவள்ளூரில் 134 பேரும், வேலூரில் 79 பேரும், ராமநாதபுரத்தில் 78 பேரும், மதுரையில் 43 பேரும் குணம் அடைந்துள்ளனர்.
சபாஷ் தமிழகம்! 41,000 பேருக்கு இன்று பரிசோதனை.. குறையும் பலி.. பின்னணி இதுதான்!
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று குணம் அடைந்தனர். இதுவரை கொரானா தொற்றில் இருந்து குணம் அடைந்தனர் என்பதை பார்ப்போம். அடைப்புக்குறியில் இதுவரை குணம் அடைந்தவர்கள் விவரம்
- அரியலூர் 1 (458)
- செங்கல்பட்டு 154 (4199)
- சென்னை 2700 (52287)
- கோவை 12 (320)
- கடலூர் 21 (989)
- தர்மபுரி 2 (71)
- திண்டுக்கல் 24 (434)
- ஈரோடு 12 (97)
- கள்ளக்குறிச்சி 51 (788)
- காஞ்சிபுரம் 39 (1216)
- கன்னியாகுமரி 33 (369)
- கரூர் 2 (132)
- கிருஷ்ணகிரி 49 (132)
- மதுரை 43 (1203)
- நாகப்பட்டினம் 6 (169)
- நாமக்கல் 0 (91)
- நீலகிரி 3 (52)
- பெரம்பலூர் 1 (159)
- புதுக்கோட்டை 20 (206)
- ராமநாதபுரம் 78 (624)
- ராணிப்பேட்டை 0 (661)
- சேலம் 37 (613)
- சிவகங்கை 61 (409)
- தென்காசி 0 (299)
- தஞ்சாவூர் 13 (384)
- தேனி 40 (479)
- திருப்பத்தூர் 13 (168)
- திருவள்ளூர் 134 (3591)
- திருவண்ணாமலை 204 (1607)
- திருவாரூர் 0 (386)
- தூத்துக்குடி 30 (953)
- திருநெல்வேலி 33 (735)
- திருப்பூர் 6 (156)
- திருச்சி 24 (663)
- வேலூர் 79 (897)
- விழுப்புரம் 21 (781)
- விருதுநகர் 42 (644)
- விமான நிலைய கண்காணிப்பு 39 (248)
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பு 39 (167)
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பு 0 (324)