கொரோனா பாதித்தது 19 மாவட்டங்கள்.. எங்கு எல்லாம் நேற்று கொரோனா பாதிப்பு அதிகம்.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமையான இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்து உள்ளது. எந்த மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாகவே உள்ளது. இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளவர்களில் 49 பேருக்கும், தமிழகத்திற்குள் 385 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. .
19 மாவட்டங்களில் கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 20 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 11 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும், திருநெல்வேலியில் 22 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும், கன்னியாகுமரியில் 4 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 2 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தஞ்சாவூர், விருதுநகரில் தலா ஒருவருக்கும், திருவண்ணாமலையில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்தது பாதிப்பு.. இன்று 434 பேருக்கு கொரோனா.. சென்னையில் கணிசமாக சரிவு
தமிழகத்தில் 10108 பேருக்கு கொரோனா தொற்று மே 15ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 348
- செங்கல்பட்டு 440
- சென்னை 5946
- கோவை 146
- கடலூர் 416
- தர்மபுரி 5
- திண்டுக்கல் 114
- ஈரோடு 70
- கள்ளக்குறிச்சி 61
- காஞ்சிபுரம் 176
- கன்னியாகுமரி 35
- கரூர் 56
- கிருஷ்ணகிரி 20
- மதுரை 143
- நாகப்பட்டினம் 47
- நாமக்கல் 77
- நீலகிரி 14
- பெரம்பலூர் 139
- புதுக்கோட்டை 7
- ராமநாதபுரம் 31
- ராணிப்பேட்டை 78
- சேலம் 35
- சிவகங்கை 13
- தென்காசி 56
- தஞ்சாவூர் 70
- தேனி 78
- திருப்பத்தூர் 28
- திருவள்ளூர் 516
- திருவண்ணாமலை 140
- திருவாரூர் 32
- தூத்துக்குடி 48
- திருநெல்வேலி 136
- திருப்பூர் 114
- திருச்சி 67
- வேலூர் 34
- விழுப்புரம் 306
- விருதுநகர் 46
- விமான நிலையத்தில் குவாரண்டைன் மொத்தம் 9 பேர்