நிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
சென்னை: நிவர் புயல் தாக்கம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, புயலால் மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென ஏற்கனவே வேளாண் துறை செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பலான விவசாயிகள் அந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர்" என்றார்.