தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை! இடி மின்னலும் இருக்குமாம்! பேரிடர் அபாய குறைப்பு முகமை அலர்ட்!
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை விடுத்துள்ள கவனிக்க வேண்டிய பதிவு.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் இடி, மின்னலிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
''தமிழ்நாடு வட உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள், மின்னல் தாக்கத்தின் போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது. நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் .
திறந்த வெளியில் இருக்க நேரிட்டால், இடி மின்னலில் இருந்து பாதுகாத்து கொள்ள குதி கால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும்.
தரையை ஒட்டி அமர்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக் கூடாது. எனவே, இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications