தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை பார்ப்போம். இன்று புதிதாக 6986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபட்சமாக சென்னையில் 1155 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. எல்லா மாவட்டத்திலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது.
9 மாவட்டங்களில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்ர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. பெரும்பாலானமான மாவட்டங்களில் 2 ஆயிரம், 3 ஆயிரம் எண்ணிக்கையை தொட்டுவிட்டன. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மட்டுமே தொற்று எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் உள்ளது.
4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை முதலிடம்
தமிழகத்தில் இன்று அதிபட்சமாக சென்னையில் 1155 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 363 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனியில் கிடுகிடு
விருதுநகரில் 385 பேருக்கும், ராணிப்பேட்டையில் 367 பேருக்கும், தூத்துக்குடியில் 248 பேருக்கும், தேனியில் 216 பேருக்கும், மதுரையில் 209 பேருக்கும், விழுப்புரத்தில் 201 பேருக்கும், திண்டுக்கல்லில் 203 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலத்திலும் அதிகம்
திருநெல்வேயில் 186 பேருக்கும், வேலூரில் 196 பேருக்கும், சேலத்தில் 158 பேருக்கும், தஞ்சாவூரில் 153 பேருககும் திருச்சியில் 131 பேருக்கும் திருவண்ணாமலையில் 176 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியிலும் குறைவு
தருமபுரியில் 118 பேருக்கும், கன்னியாகுமரியில் 212 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 123 பேருக்கும், ராமநாதபுரத்தில் 89 பேருக்கும், திருவாரூரில் 93 பேருக்கும், தென்காசியில் 74 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 47 பேருக்கும், திருப்பத்தூரில் 44 பேருக்கும், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 32 பேருக்கும், பெரம்பலூரில் 26 பேருக்கும், நீலகிரியில் 25 பேருக்கும், ஈரோட்டில் 34 பேருக்கும் அரியலூரில் 27 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும் நாமக்கல்லில் 9 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிலவரம்
தமிழகத்தில் ஜூலை 26ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இதுவரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 827
- செங்கல்பட்டு12266
- சென்னை 94695
- கோவை 3459
- கடலூர் 2415
- தர்மபுரி 700
- திண்டுக்கல் 2318
- ஈரோடு 618
- கள்ளக்குறிச்சி 3065
- காஞ்சிபுரம் 7161
- கன்னியாகுமரி 3610
- கரூர் 364
- கிருஷ்ணகிரி 716
- மதுரை 9805
- நாகப்பட்டினம் 565
- நாமக்கல் 520
- நீலகிரி 692
- பெரம்பலூர் 322
- புதுக்கோட்டை 1617
- ராமநாதபுரம் 3040
- ராணிப்பேட்டை 3834
- சேலம் 3001
- சிவகங்கை 2079
- தென்காசி 1682
- தஞ்சாவூர் 2045
- தேனி 3773
- திருப்பத்தூர் 907
- திருவள்ளூர் 11876
- திருவண்ணாமலை 5109
- திருவாரூர் 1349
- தூத்துக்குடி 5542
- திருநெல்வேலி 3773
- திருப்பூர் 700
- திருச்சி 3420
- வேலூர் 5050
- விழுப்புரம் 3131
- விருதுநகர் 5959
- விமான நிலைய கண்காணிப்பில் 787
- விமான நிலைய கண்காணிப்பில் 506
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 425
(வெளிநாடு)
(உள்நாடு)