சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா அதிகரிக்கிறது.. எங்கெல்லாம் குறைகிறது.. மாவட்ட நிலவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகவே உள்ளது. அதேநேரம் இன்று சென்னை, செங்கல்பட்டு கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு திருப்பூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் நேற்று 46,453 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதைவிட அதிகமாக 46,703 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், அங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

கொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை கொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை

தமிழகத்தில் நோயாளிகள்

தமிழகத்தில் நோயாளிகள்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில்9706 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4364 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக செங்கல்பட்டில் 2456 பேரும், நான்காவதாக செங்கல்பட்டில் 2327 பேரும், 5வதாக கடலூரில் 2315 பேரும், 6வதாக திருப்பூரில் 1803 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்

மாவட்ட நிலவரம்

தமிழகத்தில் செப்டம்பர் 20 ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 568 பேரும், சேலத்தில் 291 பேரும், கடலூரில் 297 பேரும், செங்கல்பட்டில் 283பேரும், திருவள்ளூரில் 207 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 6 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் அதிகம்

தஞ்சையில் அதிகம்

அதேநேரம் 31 மாவட்டங்களில் தொற்ற பாதிப்பு 200க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 104 பேரும், வேலூரில் 95 பேரும், திருவாரூரில் 96 பேரும், திருச்சியில் 92 பேரும், திருநெல்வேலியில் 92 பேரும், விழுப்புரத்தில் 127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 131 பேரும், தஞ்சாவூரில் 162 பேரும், புதுக்கோட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் குறைவு

பெரம்பலூரில் குறைவு

கள்ளக்குறிச்சியில் 55 பேரும், காஞ்சிபுரத்தில் 156 பேரும், கன்னியாகுமரியில் 133 பேரும் ராணிப்பேட்டையில் 42 பேரும், தேனியில் 53 பேரும், நீலகிரியில் 130 பேரும், திருப்பத்தூரில் 68 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 61 பேரும், அரியலூரில் 36 பேரும், தென்காசியில் 87 பேரும், நாகப்பட்டினத்தில் 103 பேரும், மதுரையில் 86 பேரும், கரூரில் 60 பேரும், கிருஷ்ணகிரியில் 112 பேரும் , பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamil nadu District-wise abstract of covid cases on sepetember 20 : 46,703 active cases as on today. 5,206 COVID-19 positive patients discharged following treatment today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X