சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.. என எல்லா மாவட்டங்களிலும் கொரோனா கிடுகிடு.. வெளியான லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று பரவல் கடுமையாக உயர்ந்து வருகிறது. 10 பேரை பரிசோதித்தால் அதில் ஒருவர் கொரோனா உடன் இருப்பது உறுதியாகி உள்ளது.

தென்மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இது தவிர கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் , வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கொரோனா பரவல் கடுமையாகவே உள்ளது.

கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா?.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விளக்கம்கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா?.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விளக்கம்

செங்கல்பட்டில் அதிகம்

செங்கல்பட்டில் அதிகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 448 பேரும், திருவள்ளூரில் 474 பேரும், காஞ்சிபுரத்தில் 362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் தொற்று பரவி வருகிறது. இன்று கோவையில் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அதிகம்

தூத்துக்குடியில் அதிகம்

விருதுநகரில் 338 பேருக்கும், தூத்துக்குடியில் 349 பேருக்கும், மதுரையில் 249 பேருக்கும், தேனியில் 280 பேருக்கும், கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது கன்னியாகுமரியில் 239 பேருக்கும், ராணிப்பேட்டையில் 273 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 238 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் உயர்வு

சேலத்தில் உயர்வு

திருச்சியில் 184 பேருக்கும், சேலத்தில் 190 பேருக்கும், விழுப்புரத்தில் 139 பேருக்கும், திருவண்ணாமலையில் 267 பேருக்கும், வேலூரில் 184 பேருக்கும், தஞ்சாவூரில் 115 பேருக்கும், தென்காசியில் 112 பேருக்கும், திண்டுக்கல்லில் 133 பேருக்கும் கடலூரில் 109 பேருக்கும், திருநெல்வேலியில் 191 பேருக்கும், புதுக்கோட்டையில் 98 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்கு குறைவு

எங்கு குறைவு

அரியலூரில் 48 பேருக்கும், தர்மபுரியில் 32 பேருக்கும், ஈரோட்டில் 23 பேருக்கும், கரூரில் 7 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 22 பேருக்கும், நாமக்கல்லில் 38 பேருக்கும், நீலகிரியில் 39 பேருக்கும், பெரம்பலூரில் 21 பேருக்கும், ராமநாதபுரத்தில் 54 பேருக்கும், திருப்பத்தூரில் 53 பேருக்கும், திருப்பூரில் 39 பேருக்கும் இன்று தொற்று பரவி உள்ளது.

English summary
Tamil Nadu district wise abstract of corona positive cases details on july 27, all south districts and north districts reched highest cases today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X