மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்.. விருதுநகர், தேனி, திருவள்ளூரில் மோசமான பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம். அதிகபட்சமாக சென்னை, விருதுநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 5,875 பேரில் ( சென்னையில் 1065 கேஸ்கள் ) சுமார் 4500க்கும் மேற்பட்டோர் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இன்று எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா.. டிஸ்சார்சும் அதிகம்.. நம்பிக்கை தந்த மாற்றங்கள்!
குமரியில் 200 பேர்
அரியலூரில் 78 பேரும், செங்கல்பட்டில் 446 பேரும், சென்னையில் 1065 பேரும், கோவையில் 167 பேரும், கடலூரில் 144 பேரும், தர்மபுரியில் 17 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 97 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரோட்டில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 33 பேரும், காஞ்சிபுரத்தில் 393 பேரும், கன்னியாகுமரியில் 200 பேரும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரில் 317 பேர்
கரூரில் 38 பேரும், கிருஷ்ணகிரியில் 59 பேரும், மதுரையில் 178 பேரும், நாகப்பட்டினத்தில் 16 பேரும். நாமக்கல்லில் 28 பேரும், நீலகிரியில் 14 பேரும், பெரம்பலூரில் 27 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் 125 பேரும், ராமநாதபுரத்தில் 45 பேரும், தென்காசியில் 95 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும், தேனியில் 309 பேரும், திருப்பத்தூரில் 70 பேரும், திருவள்ளூரில் 317 பேரும், திருவண்ணாமலையில் 142 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் 337 பேர்
திருவாரூரில் 45 பேரும், தூத்துக்குடியில் 271 பேரும், திருநெல்வேலியில் 201 பேரும், திருப்பூரில் 40 பேரும், திருச்சியில் 136 பேரும், வேலூரில் 173 பேரும், விழுப்புரத்தில் 99 பேரும், விருதுநகரில் 337 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாடுகளில் இருந்து வந்து விமான நிலைய கண்காணிப்பில் உள்ளவர்களில் 15 பேரும், உள்நாடுகளில் இருந்து வந்து விமான நிலைய கண்காணிப்பில் உள்ளவர்களில் 11 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நிலவரம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இதுவரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
- அரியலூர் 1023
- செங்கல்பட்டு 15,312
- சென்னை 1,01,951
- கோவை 5,230
- கடலூர் 3,415
- தர்மபுரி 787
- திண்டுக்கல் 2,990
- ஈரோடு 754
- கள்ளக்குறிச்சி 3,840
- காஞ்சிபுரம் 9,785
- கன்னியாகுமரி 5,092
- கரூர் 560
- கிருஷ்ணகிரி 1102
- மதுரை 11352
- நாகப்பட்டினம் 789
- நாமக்கல் 757
- நீலகிரி 812
- பெரம்பலூர் 524
- புதுக்கோட்டை 2383
- ராமநாதபுரம் 3338
- ராணிப்பேட்டை 5469
- சேலம் 3804
- சிவகங்கை 2471
- தென்காசி 2315
- தஞ்சாவூர் 3008
- தேனி 5664
- திருப்பத்தூர் 1234
- திருவள்ளூர் 14430
- திருவண்ணாமலை 6446
- திருவாரூர் 1781
- தூத்துக்குடி 7628
- திருநெல்வேலி 5572
- திருப்பூர் 949
- திருச்சி 4416
- வேலூர் 6242
- விழுப்புரம் 4022
- விருதுநகர் 8491
- விமான நிலைய கண்காணிப்பில் 836
- விமான நிலைய கண்காணிப்பில் 614
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 425
(வெளிநாடு)
(உள்நாடு)