ஹேப்பியா.. தமிழகத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி இனி ரூ.3 கோடி.. அரசாணை வெளியிட்டது அரசு
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டு, அதற்கான அரசாணை, இன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொகுதி மேம்பாட்டு நிதியை மேலும் 50 லட்சம் ரூபாய் உயர்த்தி முதல்வர் கடந்த ஜூலை மாதம், சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.2.50 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இது தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் அப்போது அறிவித்தார்.
இந்த அறிவிப்பு முறைப்படி இன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு திட்டம், இனி அமலுக்கு வரும்.
Comments
English summary
Tamil Nadu Government on today announced MLALAD Fund will be increased from Rs 2.5 crore per year to Rs 3 crore.