'20'20'ன் கடைசி நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா? பாசிட்டிவ் மாற்றம்
சென்னை: 2020ம் ஆண்டின் கடைசி நாளானா இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட குறைவு ஆகும். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,18,014 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 8,501 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2020 மார்ச்சில் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டின் இறுதி நாளான பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 7000 வரை உயர்ந்த கொரோனா இன்று ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 20க்கும் கீழாகவே உள்ளது.
சென்னை உள்பட எல்லா மாவட்டங்களுமே கொரோனாவால் இப்போது பெரிய அளவில் பாதிக்கப்படுவது இல்லை. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,18,014 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,501பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று கொரோனா தொற்றால் 17 பேர் பலியாகிய நிலையில் இன்று அதைவிட குறைவாக 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,122 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,038 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,97,391 பேர் மீண்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் காவலரின் உடலுடன்..20 நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் குடும்பத்தினர்.. திண்டுக்கல் ஷாக்!
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 259 பேர், கோவையில் 89 பேர், செங்கல்பட்டில் 53 பேர், திருவள்ளூரில் 41 பேர், திருப்பூரில் 36 பேர், ஈரோட்டில் 42 பேர், காஞ்சிபுரத்தில் 25 பேர், சேலத்தில் 38 பேர், திருச்சியில் 22 பேர் மற்றும் மதுரையில் 14 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 44 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.