தொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்!!
சென்னை: கேரளாவில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் அதற்கான உதவிகளை செய்யுமாறு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டார். இதை ஏற்று உடனடியாக அமைச்சர் விஜய பாஸ்கர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி டீனா. இவர்களுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் கோளாறு இருந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் வேலூரில் இருக்கும் சிஎம்சி மருத்துவமனையில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது மாநிலத்தில் இருந்து மாநிலம் செல்வதற்கு தடை இருக்கிறது. செல்ல வேண்டுமானால் இ பாஸ் எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
இதையடுத்து அந்தக் குழந்தையின் பெற்றோர் வேலூர் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்டுக் கொண்டனர். அவரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று உடனடியாக அந்தக் குழந்தையை வேலூர் கொண்டு வருவதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார் விஜய் பாஸ்கர்.
அடுத்த 24 மணி நேரத்தில்.. இந்த 7 மாவட்டங்களில் கன மழை கொட்டும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Recommended Video
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தையுடன் பெற்றோரும் ஆம்புலன்சில் அடூரில் இருந்து புறப்பட்டனர். 16ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் 17ஆம் தேதி காலை, அதாவது பத்து மணி நேரத்தில் 700 கி.மீட்டர் தொலைவைக் கடந்து மின்னல் வேகத்தில் வேலூர் வந்து சேர்ந்தது.
தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் குழந்தைக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை துவங்கப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.