சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தடுப்பு பணி, பாதிப்புகளை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Tamil Nadu needs Rs.9000 crores fund: Edappadi Palanisamy

    மாநில அரசுகளுக்கு வழக்கமாக வழங்கும் நிதி போல் அல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியாவின் ஜிடிபி மற்றும் மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு

    இக்கட்டான இதுபோன்ற தருணத்தில், தனது கோரிக்கையை பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy has written PM ans said that Tamil Nadu needs Rs.9000 crores fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X