நபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..!
சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
நபிகளார் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம் ; அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும் -ஓ.பன்னீர்செல்வம்
பொய் இன்றி - வாக்குறுதியில் வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க தியாக சீலராக வாழ்ந்தவர் நபிகளார்; நபிகளாரின் போதனைகளும், அறிவுரைகளும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகிய மூன்றையும் துறந்தவர் நபிகள் பெருமானார் -மு.க.ஸ்டாலின்
தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமை நபிகளாருக்கு உண்டு; நபிகள் நாயகம் போதனைகளின்படி அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் -கே.எஸ்.அழகிரி
"கொக்கி" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக!
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது எனக் கூறி தாய்மைக்கும் பெண் இனத்திற்கும் உயர்வு சேர்த்தவர் நபிகள் பெருமானார்; அன்பு தான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்ற போதனைக்கேற்ப அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள் -டிடிவி தினகரன்