தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 411
சென்னை: தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கேரளாவில் அதிக பாதிப்பு இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.
#CODVID19 TN STATS 03.04.20:
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 3, 2020
Screened Passengers: 2,10,538
Beds in Isolation Wards: 23,689
Ventilators: 3,396
Current Admissions:1,580
Samples Tested: 3,684 (Negative:2789, Positive: 411 (Discharged:7), Under Process: 484)
#TN_Together_AgainstCorona @MoHFW_INDIA
மேலும் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 2,10, 538 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. மருத்துவமனைகளில் 23,689 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.