சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 5,519 பேருக்கு கொரோனா.. 77 பேர் மரணம்.. 6,006 பேர் டிஸ்சார்ஜ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று குறைவாக உள்ளது.மொத்த நோயாளிகள் எண்ணிக்கையும் 47 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குணம் அடைந்து வீடுதிரும்புவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது.

ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,006 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,35,422 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 932 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 692 பேரும், கோவையில் 550 பேரும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 8,231 பேர் பலி

இதுவரை 8,231 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 64 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று 77 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை மிக அதிகம்

பரிசோதனை மிக அதிகம்

தமிழகத்தில் இன்று 84,893 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 57,15,216 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 82,891 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 55,32,526 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 47,918 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 932 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 146593 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 10879 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக கோவையில் இன்று 394 பேரும், திருவள்ளூரில் 312 பேரும், சேலத்தில் 298 பேரும், திருவண்ணாமலையில் 296 பேரும், டலூரில் 289 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamil nadu coronavirus positive cases rises 5,519 on Today. 77 people have been killed by corona in a single day today. Similarly, 6,006 people have discharged from corona in tamilnadu on septemer 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X