சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன, அதில் தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

இன்று மாலை நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மொத்தம், 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம், 2.7 லட்சம் தேர்தல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

Tamil Nadu will have more polling booths for assembly election

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 44 தனித்தொகுதிகள் தனித் தொகுதிகள். 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை.

தமிழகத்தில் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu will have more polling booths for assembly election 2021, says chief election commissioner Sunil Arora.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X