தமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி
சென்னை: தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன, அதில் தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
இன்று மாலை நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மொத்தம், 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம், 2.7 லட்சம் தேர்தல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 44 தனித்தொகுதிகள் தனித் தொகுதிகள். 2 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை.
தமிழகத்தில் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.