பட்டாசு இருக்காது.. பஞ்சாங்கத்திலயே சொல்லியாச்சு
சென்னை: தீபாவளி என்றாலே எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்பது தொடர்பான பேச்சுகளைத்தான் சமீப நாட்களாக அதிகமாக கேட்கமுடிகிறது.
தமிழகத்திற்கு காலையில் ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது தமிழக அரசு. பிற வட மாநிலங்களிலோ இரவு இரண்டு மணி நேரங்கள் பட்டாசு வெடித்துக் கொள்ள முடியும்.
இந்த தீபாவளிக்குதான், பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு, அது தொடர்பாக விவாதித்துக்கொண்டு உள்ளது இந்தியா. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் வெடி இல்லாத தீபாவளியாக அமலுக்கு வரும், சென்னையிலும் அதற்கான முயற்சிகள் நடக்கும் என்று பஞ்சாங்கம் ஒன்றில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் வெடி இல்லாத தீபாவளியாக அமலுக்கு வரும் - அன்றே சொன்ன பஞ்சாங்கம். #Deepavali @manomontreal pic.twitter.com/8emNRCanLn
— Hari Prabhakaran (@Hariadmk) November 2, 2018
'சுத்த சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்' என்ற பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாத பலன்கள் இடம்பெற்றுள்ள பகுதியில், இந்த விவரம் இடம்பெற்றுள்ளது, என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் கன மழை பொழிந்தது தொடர்பான தகவல்களும் பஞ்சாங்கத்தில், முன்கூட்டியே, இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் சுற்றி வந்தது.