திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி
சென்னை: திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
திமுக கூட்டணியில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட சிறு கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டும் படாமல் பேசியது இதுக்குத்தானா.. கமல் தரும் டிவிஸ்ட்.. திமுக, அதிமுகவிற்கு இணையாக மநீம பிளான்?
வேல்முருகன் பேட்டி
எனவே இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை அளித்த பேட்டியின்போது, இந்த கூட்டணியை உறுதி செய்தார்.
உதய சூரியன் சின்னம்
தமிழக வாழ்வுரிமை கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும், இன்று மாலை தொகுதி உடன்பாடு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழக அரசோடு சேர்ந்து கொண்டு மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், எனவே, அதை வீழ்த்த திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணி
இதனிடையே இன்று மாலை திமுக-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே, தொகுதி பங்கீடு உறுதியானது. திமுக கூட்டணியில் அக்கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகிறது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலால 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இதில், மதிமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவது குறிப்பிடத்தக்கது.
உதயசூரியன்
திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சியும் இடம்பெற்றுள்ளது. இதன் தலைவர் முருகவேல் ராஜன். இந்த கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.