நெல்லை வீர தம்பதிக்கு.. 'அதீததுணிவு' விருது- நாளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி!
Recommended Video
சென்னை: கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு நாளை சுதந்திர தின கொண்டாட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதீத துணிவு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டிற்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்பு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர்கள் சண்முகவேலின் கழுத்தில் துண்டை இறுக்கி போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார்.
அபபோது அதனைபார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செந்தாமரை, உடனே தைரியமாக கொள்ளையர்களை நோக்கி வீட்டில் இருந்த பொருளை எடுத்து வீசினார். இதனால் கொள்ளையர்கள் சண்முகவேலை விட்டுவிட்டு செந்தாமரையை தாக்க முயன்றார்கள்.
இதன்பின்னர் சண்முகவேலும் கொள்ளையர்களை ஆவேசமாக தாக்கினார். இதையடுத்து கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது செந்தாமரையும் சண்முகவேலும் எறிந்தனர். இதனால் ஒருகட்டத்தில் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சிதம்பரமே சும்மா இருக்காரு.. கே எஸ் அழகிரி ஏன் முந்திரி கொட்டையாட்டம் விமர்சிக்கிறாரு?.. கராத்தே
கொள்ளையர்களை எதிர்த்து போராடி சண்டை போட்ட வயதான தம்பதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு விருது அளித்து கௌரவம் அளிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கௌரவிக்கிறார்.