சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. வைகோவுக்கு தமிழிசை அதிரடி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    கணேசமூர்த்திக்கு ராஜ்யசபாவை ஒதுக்கியிருக்கலாமே.. தமிழிசை கேள்வி

    சென்னை: "நீங்க ஈரோட்டில் போட்டியிட்டு விட்டு.. அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபா தந்திருக்கலாமே.. என்று வைகோவுக்கு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

    எப்படா வைகோ பிரச்சாரத்துக்கு வருவார்.. வாய் திறப்பார் என்று காத்திருந்தார் போலும்.. தமிழிசை தடாலடியாக 2 ட்வீட் போட்டு தாக்கிவிட்டார்.

    4 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்ததுடன், பிரச்சாரமும் செய்ய போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரமும் மேற்கொண்டார். அப்போது அதிமுக-பாஜகவை கடுமையாக சாடினார்.

    ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ! ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

    தமிழிசை

    தமிழிசை

    வைகோ என்ன பேசினார் என்பதை எல்லாம் உன்னிப்பாக கவனித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அது சம்பந்தமான ட்வீட்களை போட்டுள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    "அந்தப்பணம் கொள்ளையடித்த பணம்! உங்கள் பணம் பொதுப்பணித்துறையில் திருடியது. பருப்பு வாங்கியதில் கமிஷன்! என திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் சொல்கிறார் வைகோ துரைமுருகன் வீட்டில் பிடிபட்ட பணம்? தூத்துக்குடியில் கனிமொழி சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகித்த பணம்?யார் பணம்???மக்கள் பணம்தானே?" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    கணேசமூர்த்தி

    "திமுககூட்டணி நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்களே அந்த மகத்தான நம்பிக்கையில் மதிமுக விற்கு கிடைத்த ஒரே சீட்டில் நீங்கள் போட்டியிட்டு அண்ணன் கணேசமூர்த்திக்கு ராஜ்யசபை சீட்டை ஒதுக்கியிருக்கலாமே?" என்று மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

    சவால்

    இதற்கு நெட்டிசன்கள் மாறி மாறி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். "துரைமுருகன் பேட்டி வருமாறு: 13 கோடி என்னுடைய பணம் என்று நிருபித்தால் அரசியலை விட்டே விலகிகொள்கிறேன் என்று முதல்வர்க்கு சவால் விடுத்துள்ளார். அதற்கே இன்னும் பதிலைக் காணும்" என்கிறார் ஒருவர்.

    அன்புநாதன்

    அன்புநாதன்

    "அந்த சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட பணம் எங்கிருந்து வந்தது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? அன்புநாதன் வீட்டில் பிடிபட்ட பணம் என்னவாயிற்று என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று இன்னொருத்தர் கேள்வி எழுப்புகிறார்.

    "கணேச மூர்த்தி நின்றாலே ஜெயித்து விடுவார் எனும்போது வைகோ எதற்காக நிக்கனும்" என்று தமிழிசைக்கு கேள்வி மேல் எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Tamilisai Soundarajan tweet about MDMK Vaiko and Erode Candidate Ganesa Moorthy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X