இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி
ஏசி சண்முகம் குற்றச்சாட்டுக்கு தமிழிசை சவுந்தராஜன் பதில் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் தோற்க பாஜக காரணம் இல்லை என்றும், ஏசி சண்முகம் இப்படி ஏன் சொல்கிறார் என தெரியவில்லை என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் பிரச்சார சமயத்தில், பாஜக தலைமையின் ஒவ்வொரு செயல்பாடும் அதிமுக தலைமை வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருந்தது.
அதனால்தான், முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், பாஜகவை பிரச்சாரத்திற்கு வரவிடாமல் தடைபோட்டது அதிமுக என்று சொல்லப்பட்டது.
செம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா?
ஏசிஎஸ்
முத்தலாக் சட்டத்திற்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரவு அளித்து பேசியபோது, அதை எதிர்த்து கருத்துகூட சொல்ல முடியாத தர்மசங்கடத்துக்கு அதிமுக தலைமை ஆளானது. பாஜக கொடியைகூட தொகுதிக்குள் பறக்க விடாமல் கண்ணும் கருத்துமாக அதிமுக இருந்தநிலையில், ஏசிஎஸ் மட்டும் பாஜகவை அதிகம் நம்பினார்.
தோல்வி
தமக்காக பிரதமர் மோடியே பிரச்சாரத்துக்கு வருவார் என்றுகூட சொன்னார். ஆனால் எல்லாமே சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இப்போது, ரிசல்ட் வந்து 4 நாள் கழித்து தன்னுடைய தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் ஏசிஎஸ். வேலூர் தேர்தலில் தான் தோற்றதற்கு காரணம் பாஜகதான் என்பதை மறைமுகமாக சொல்லி உள்ளார்.
வாக்குறுதி
அதில் "என்ஐஏ சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம், 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தி மட்டும் இல்லாவிட்டால், 15,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். இந்த அதிருப்தியால்தான் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டனர். ஆனாலும் வேலூர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்திருந்தார்.
தமிழிசை
ஏசிஎஸ்-ன் இந்த குற்றச்சாட்டிற்கு தமிழக பாஜக தலைவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். "ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. பாஜகவால் அவர் தோற்கவில்லை. ஒருவேளை ஏசிஎஸ் சண்முகம் சொல்வதுபோல, இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் அவர் தோற்றிருப்பாரே தவிர இப்படி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க மாட்டார். அதனால் ஏசி சண்முகம் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை.
பாஜகவா?
உண்மையில் இஸ்லாமியர்கள் இந்த சட்டத் திருத்தங்களை எதிர்க்கவில்லை. ஆதரிக்கவே செய்கிறார்கள். எதிர்ப்பதாக சொல்வதா காங்கிரஸ்தான். எனவே ஏசிஎஸ் தோற்க நிச்சயம் இஸ்லாமியர்களோ அல்லது பாஜகவோ காரணம் இல்லை" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் சேர்க்கை
ஏன் வேலூர் பிரச்சாரத்துக்கு போகவில்லை என்று செய்தியாளர்கள் அன்று கேட்டதற்கு, "கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் நிறைய இருக்கு" என்று தமிழிசை காரணம் சொல்லி இருந்தது நினைவுகூரத்தக்கது.