ஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்!
மக்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: "உங்க மேலயே மக்களுக்கு நம்பிக்கையில்லை.. சட்டை கிழிப்பு.. போட்டி சட்டமன்றம்.. இதெல்லாம் நடத்தியுமே பயனில்லை, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நம்பிக்கை தராது" என்று முக ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் போட்டு தாக்கி உள்ளார்.
3 எம்எல்ஏக்களுக்கு நேற்று சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இந்த அதிரடிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதிலும் வழக்கம்போல் முக ஸ்டாலினை இடித்துரைத்து ட்வீட் போட்டுள்ளார்.
அதில், "உங்கள்மீது தமிழக மக்களுக்கே நம்பிக்கையில்லை. எனவேதான் எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர். வெளிநடப்புகள்/சட்டைகிழிப்பு/போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது" என்று பதிவிட்டுள்ளார்.
@mkstalin உங்கள்மீது தமிழகமக்களுக்கே நம்பிக்கையில்லை.எனவேதான்எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர்.வெளிநடப்புகள்/சட்டைகிழிப்பு/போட்டிசட்டமன்றம்நடத்தியும். பயனில்லை.இந்த நம்பிக்கையில்லாதீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது https://t.co/ljJJ44TsZB
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 30, 2019
ஆனால் இதற்கு, "நம்பிக்கை இல்லை என்றால் எப்படி எதிர்க்கட்சியில் அமர வைக்கமுடியும்.." என்று கேள்விகளை கேட்டு நெட்டிசன்கள் கமென்ட் போட்டு வருகின்றனர்.
நம்பிக்கை இல்லை என்றால் எப்படி எதிர்க்கட்சியில் அமரவைக்கமுடியும்...
— Ravi (@sravishankars) April 30, 2019