சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி

ப.சிதம்பரம் விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai tweets on P Chidambaram | தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி- வீடியோ

    சென்னை: "வாழைப்பழ காமெடி கதை போல் கேள்வி கேட்ட அரசியல் காமெடியர்களுக்கு பதில் தரவேண்டி பதுக்கியவர்கள்? சுருட்டியவர்கள்? தேடப்படுகிறார்கள்?" என்று ப.சிதம்பரம் குறித்து தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் போட்டுள்ளார். இதற்கு, "கைது செய்தால் மட்டும் பொருளாதார மந்தநிலை சரியாகிவிடுமா?" என்று நெட்டிசன்கள் தமிழிசையிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    11 வருஷமாக நடந்து வரும் ப.சிதம்பரம் வழக்கு, இப்போது இறுதி கட்டத்தையும், உச்சத்தையும் எட்டியுள்ளது. அவரை கைது செய்ய வீட்டுக்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை என்ற தகவலால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது.

    அதனால் அவரை சிபிஐ வலைவீசி தேடி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை தற்போது பாஜக பக்காவாக பயன்படுத்தி கொண்டு வருகிறது.

    மிக மோசமான பழிவாங்கும் நடவடிக்கை.. போலீஸ் ராஜ்யம்..ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கொந்தளிப்பு மிக மோசமான பழிவாங்கும் நடவடிக்கை.. போலீஸ் ராஜ்யம்..ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கொந்தளிப்பு

    பாஜக

    பாஜக

    4 முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த முக்கிய தலைவர் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என்று பாஜகவினர் ஏற்கனவே இணையத்தில் நோண்டி நுங்கெடுத்து வருகிறார்கள்.

    ட்வீட்

    ட்வீட்

    இதை பற்றி ஏற்கனவே சுப்பிரமணியசாமி, எச்.ராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் ட்வீட் போட்டு கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழிசை சவுந்தராஜனும் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "வங்கியில் போடுவதாக சொன்ன கருப்பு பணம் 15 லட்சம் எங்கே ?எங்கே? என்று வாழைப்பழ காமெடி கதை போல் கேள்வி கேட்ட அரசியல் காமெடியர்களுக்கு பதில் தரவேண்டி பதுக்கியவர்கள்? சுருட்டியவர்கள்? தேடப்படுகிறார்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

    ரவிக்குமார்

    இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், சிதம்பரம் தேடப்பட்டு வரும் விவகாரம் குறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், முன்னாள் நிதி அமைச்சரை கைது செய்தால் பொருளாதார மந்தநிலை சரியாகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    சொல்லுங்க அக்கா

    ரவிக்குமாரின் இந்த ட்வீட்டை, தமிழிசையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நெட்டிசன்கள், "பதில் சொல்லுங்க அக்கா" என்று தமிழிசையை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

    English summary
    P Chidambaram INX case issue: Tamilisai Soundarajan tweet about P Chidambarams case issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X