பாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை!
சென்னை: மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்கினால் கூடவே பதநீர் சேர்த்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது காய்கறிகள், முட்டை, தானிய வகைகள் என 13 உணவு வகைகள் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே சத்துணவில் காய்கறிகள் முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
மோடியை 'டைம்' இதழ் அட்டைப்படம் போட்டு விமர்சிக்க காரணம் என்ன? கடைசியில் 'கண்டுபிடித்துவிட்டது' பாஜக!
பதநீர் வழங்குக பாலுடன் https://t.co/vbSo2vmTlj
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 11, 2019
இதுதொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசுக்கு டிவிட்டர் வாயிலாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் சேர்த்து பதநீரும் வழங்க வேண்டும் என்பதுதான்.