ஜூலை முதல் வாரம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை: ஜூலை முதல் வாரத்தில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியதை பாருங்கள்.
கவிதா செய்த காரியத்தை பார்த்தீங்களா... சடலத்தை ரூமுக்குள் வைத்து கொண்டு.. அதுவும் 3 நாள்.. ஷாக் !
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறைவடையும். புத்தகம் தயாரானதும், மாணவர்களுக்கு எப்போது வழங்குவது என்று முடிவெடுக்கப்படும்.
பாடத்திட்டம் குறைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. சூழ்நிலை கருதி பருவத் தேர்வுகள் ரத்து தொடர்பாக ஆலோசிக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.