தமிழக சட்டசபை இடைத் தேர்தல் Live: 18 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது
Recommended Video
Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 42.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற்று வரும் தொகுதிகள் விவரம்: பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), நிலக்கோட்டை (தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), பரமக்குடி (தனி), சாத்தூர், விளாத்திகுளம் ஆகியவைதான் அந்த சட்டசபை தொகுதிகளாகும்.
இந்த தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான உடனடி அப்டேட்களுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Newest First Oldest First
தமிழக இடைத்தேர்தலில் 55.97% வாக்கு பதிவு
தமிழகம்: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி இடைத்தேர்தலில் 55.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவை தேர்தலில் கரூரில் அதிகபட்சமாக 56.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 45.65 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
சென்னையில் பெரம்பூர் பெரியார் நகர் வாக்குச் சாவடி மையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரின் முகவரை துணை ராணுவப் படை காவலர் தாக்தியதாக புகார். காவலர் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் உடைந்ததால் வாக்குச் சாவடி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக இடைத்தேர்தல்: 42.92 சதவீதம் வாக்குப் பதிவு
தமிழகத்தில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக ஆம்பூர் சட்டசபை தொகுதியில் 50.74 சதவீதம் வாக்குகளும் குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 32.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.
தமிழகம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பெண் பலி
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பெண் மரணமடைந்தார். மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் சிசிலி மோரல் வாக்களிக்க வந்தார். அப்போது தேர்தல் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
தமிழகம்
ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வருமான வரிச் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் வேலூரை போல் ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத்தேர்தல் ரத்தாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
Comments
English summary
The Election Commission will hold by-elections for 18-Assembly constituencies on Thursday in Tamilnadu while the remaining four seats will go to polls on May 19. Here is the live updates.