தமிழக பட்ஜெட் 2019: வேளாண்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான திட்டங்கள்.. ஓ.பி.எஸ் அறிவிப்பு!
தமிழகத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் நிறைய முக்கியமான திட்டங்களையும், அதிரடி அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதன்படி, வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
2019-20ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும். ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீர் சேமிப்பை அதிகரிக்க நுண்ணீர் பாசனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும். ரூ. 1361 கோடி செலவில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம். 10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம், என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.