சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின'' வாழ்த்து..!

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ''ஆசிரியர் தின''வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஆசிரியர் பணிக்கு பெருமை தேடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம் என்றும், நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக்கூடிய ஒரே கருவி கல்வி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

tamilnadu cm edapadi palanisamy greatings to teachers

மாணவக் கண்மணிகளிடம் அன்பையும், அரவணைப்பையும் காட்டி ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் காட்டிய வழியில் மாணாக்கர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணாகர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவச் செல்வாங்களை உருவாக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது எனவும், மாணவ சமுதாயத்திற்காக அல்லும் பகலும் உழைக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள் எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா!கொழும்பு யுனிசெப் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாக்.- பதிலடி கொடுத்த இந்தியா!

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் தனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை உரிதாக்கி கொள்வதாக வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
tamilnadu cm edapadi palanisamy greatings to teachers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X