கஜா புயல்.. முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளன. புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதேபோல பொதுமக்களிடமிருந்தும், பொது நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும், முதல்வர் புயல் நிவாரண நிதிக்கு ரூ.127.22 கோடி பணம் கிடைத்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ள நிலையில், இந்த நிவாரண உதவி யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டதை போலத்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் மனமுன்வந்து மேலும் நிதி உதவி செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Tamilnadu CM Gaja cyclone relief fund gets RS.127.22 Crores while TN gvt asking 1500 crores rupees fro union government.