தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 119 பேர் மரணம்- சென்னை- 18; கோவை, தூத்துக்குடியில் 14 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 18 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 18,650 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொடக்கத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்திருக்கிறது.
சென்னையில்தான் இன்று அதிக அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை, தூத்துக்குடியில் தலா 7 பேர் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!
மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் (அடைப்புக் குறிக்குள் மொத்த மரணங்கள் எண்ணிக்கை)
- அரியலூர் 1 (15)
- செங்கல்பட்டு 7 (329)
- சென்னை- 18 (2384)
- கோவை- 7 (156)
- கடலூர்- 5 (65)
- தருமபுரி- 0 (9)
- திண்டுக்கல் - 2 (84)
- ஈரோடு - 0 (19)
- கள்ளக்குறிச்சி- 2 (43)
- காஞ்சிபுரம் - 6 (166)
- கன்னியாகுமரி - 6 (103)
- கரூர்- 2 (16)
- கிருஷ்ணகிரி- 0 (23)
- மதுரை- 5 (308)
- நாகப்பட்டினம் - 0 (16)
- நாமக்கல் - 2 (18)
- நீலகிரி - 0 (3)
- பெரம்பலூர்- 0 (11)
- புதுக்கோட்டை- 4 (47)
- ராமநாதபுரம்- 5 (84)
- ராணிப்பேட்டை- 2 (63)
- சேலம் - 5 (66)
- சிவகங்கை - 1 (72)
- தென்காசி - 4 (61)
- தஞ்சாவூர்- 3 (59)
- தேனி- 5 (104)
- திருப்பத்தூர்- 1 (34)
- திருவள்ளூர்- 4 (315)
- திருவண்ணாமலை- 5 (106)
- திருவாரூர் - 1 (18)
- தூத்துக்குடி- 0 (82)
- நெல்லை- 7 (106)
- திருப்பூர்- 3 (37)
- திருச்சி - 2 (81)
- வேலூர்- 1 (102)
- விழுப்புரம்- 1 (47)
- விருதுநகர்- 2 (144)