தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756279 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் 6 கோடி பேரை பாதித்துள்ளது. 4 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்ட நிலையில் 87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு.
தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 779046 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4,70,670 ஆண்கள், 3,08,343 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 போலீஸாருக்கு கொரோனா உறுதி.. உச்ச கட்ட எச்சரிக்கையில் பம்பை!
கொரோனாவில் இருந்து இன்று 1453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756279 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11694 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11, 073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 66,063 மாதிரிகளும், இதுவரை 1,19,30,240 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 65,579 பேருக்கும், இதுவரை 1,16,40,583 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.