சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 777616 ஆக அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,77616 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,494பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754826ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,435 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,77616 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,494பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754826ஆக அதிகரித்துள்ளது.

Tamilnadu covid 19 affected 1,435 on Nov 27

இன்று மட்டும் 12பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 681ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 60, 610 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 18லட்சத்து 64 ஆயிரத்து 177ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 883பேர் ஆண்கள், 559பேர் பெண்கள். தமிழகத்தில் 220 பரிசோதனை மையங்கள் உள்ளன.

கடலாக மாறிய மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகடலாக மாறிய மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விபரம்:

சென்னை, கோவையில் மட்டுமே நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் 10க்கும் கீழே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது சற்றே ஆறுதல் தரக்கூடியதாக உள்ளது.

சென்னை - 392, கோவை - 145, அரியலூர் - 10, செங்கல்பட்டு - 77,கடலூர் - 32, தர்மபுரி - 16, திண்டுக்கல் - 29, ஈரோடு - 55, கள்ளக்குறிச்சி - 9, காஞ்சிபுரம் - 48,கன்னியாகுமரி - 31,கரூர் - 13, கிருஷ்ணகிரி - 13,மதுரை - 20, நாகை - 23,நாமக்கல் - 36,நீலகிரி - 11, பெரம்பலூர் - 1, புதுக்கோட்டை - 9, ராமநாதபுரம் - 10,ராணிப்பேட்டை - 11,சேலம் - 76, சிவகங்கை - 12,தென்காசி - 11, தஞ்சாவூர் - 25, தேனி - 9, திருப்பத்தூர் - 17,திருவள்ளூர் - 59, திருவண்ணாமலை - 9, திருவாரூர் - 16, தூத்துக்குடி - 12, திருநெல்வேலி - 30, திருப்பூர் - 60,திருச்சி - 28, வேலூர் - 47, விழுப்புரம் - 25, விருதுநகர் - 15.

English summary
Corona has been confirmed for 1,435 people in Tamil Nadu today. This brings the number of corona victims across the state to 7,77616. Today, 1,494 people have recovered from corona infection in a single day. The total number of healers across the state has increased to 754826.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X