சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா கிடுகிடு.. ராயபுரத்தில் 2 ஆயிரத்தை நெருங்கியது
சென்னை: சென்னையில் மே 25ம் தேதி நிலவரப்படி மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மே24ம் தேதி ஒரு நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுதான் சென்னை மற்றும் தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.சென்னையில் மட்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி
மண்டல வாரியாக பாதிப்பு விவரம்:
- திருவெற்றியூர்: 300
- மணலி: 142
- மாதவரம் 223
- தண்டையார் பேட்டை 1044
- இராயபுரம் 1981
- திருவிக நகர் 1188
- அம்பத்தூர் 446
- அண்ணா நகர் 867
- தேனாம்பேட்டை 1118
- கோடம்பாக்கம் 1460
- வளசரவாக்கம் 703
- ஆலந்தூர் 121
- அடையார் 579
- பெருங்குடி 168
- சோழிங்கநல்லூர் 173
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/JGfriKUJHB
— Greater Chennai Corporation (@chennaicorp) May 25, 2020
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 63